Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் மறைந்ததையிட்டு கனடா இளையோர் அமைப்பினரின் இரங்கல்.

பெரும் மதிப்புக்குரிய தமிழீழத் தேசியத்தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் அவர்கள் மறைந்ததையிட்டு கனடா தமிழ் இளையோர் அமைப்பு ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைகின்றது.

தமிழீழ விடுதலைப் பயணத்தை தலைமை தாங்க ஓரு சூரியத்தேவனைப் பெற்றெடுத்த தேசத்தின் தாய் அமரர் பார்வதி அம்மாள் அவர்களுக்கு கனடா தமிழ் இளையோர் அமைப்பு தனது இதய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

ஈழத் தமிழரை அடிமையின் பிடியிலிருந்து விடுவிக்க போராடும் தமிழ் தானைத் தலைவனை பெற்றெடுத்து அவருக்கு வீரமும் விவேகமும் உட்டி வளர்த்த பார்வதி அம்மள் அவர்கள் தேசியத்தலைவரின் இலட்சியப் பயணத்துக்கு வழிகாட்டியாக இருந்திருக்கின்றது.

தேசியத்தலைவரின் பெற்றோர் என்ற காரணத்துக்காக இவரும் இவரது கணவரான அமரர் திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் சிறிலங்கா அரசின் துன்புறுத்தல்களுக்கு பல ஆண்டுகளாக ஆளாகி வந்திருக்கின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பின் 7 மாதங்காக முதியவர்கள் என்றும் பாராமல் தேசியத்தலைவரின் பெற்றோராகவும் தமிழர்களாகவும் இருந்த காரணங்களுக்காக சிறிலங்கா அரசின் வதைமுகாமில் வெளித் தொடர்புகளுக்கோஇ மருத்துவ வசதிகளுக்கோ அனுமதிக்கப்படவில்லை.

தேசியத் தாய் அண்மையில் தமிழ் நாட்டில் சிகிற்சையளிக்க அனுமதி மறுக்கப்பட்டு பின்பு தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சரான கரணநிதியால் நிபந்தனைகளுடன் அளித்த பெற்ற அனுமதியை மறுத்தழித்து தனது சொந்த மண்ணான வல்வெட்டித்துறையிலேயே சிகிட்சை பெற்றுவந்தார். இத்தோடு இவரது கணவர் திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் அண்மையினிலேயே இறைவனடி சேர்ந்தார்.

பாரிசவாத நோயினால் கடுமையான உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் துன்புறுத்தல்களுக்கு ஆளான நிலையில் இவரது மறைவுச் செய்தி குறிப்பாக உலகெங்கும் வாழும் தமிழ் இளையோர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இவரது பிரிவால் துயரால் வாடும் தேசியத் தலைவருக்கும் அவரது உறவினர்களுக்கும் மற்றும் தமிழீழ மக்களுக்கும் எமது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அத் துயரத்தில் கனடா இளையோர் அமைப்பும் பங்கெடுத்துக் கொள்கின்றது.

TYO Media - Canada

0 Responses to ஈழத் தாயார் பார்வதி அம்மாள் மறைந்ததையிட்டு கனடா இளையோர் அமைப்பினரின் இரங்கல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com