கடந்த சில தினங்களாக தென்பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மழை நீர் ஆறுகளினுடாக பெருக்கெடுத்து அருவியாற்றில் கலந்து தாழ்வான இடங்களை நோக்கி ஊடறுத்துச்செல்கின்றது.
இந்த நிலையில் தம்பனைக்குளம் கிராமத்திலும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுள் 15 குடும்பங்களைச்சேர்ந்த 48 பேர் ஆலையத்திலும், ஏனைய 29 குடும்பங்களைச்சேர்ந்த 82 பேர் அருகில் உள்ள சிறுவர் பாடசாலையிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் கிராம மக்களை பார்வையிடச்சென்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்காண பால்மா வகைகளை வழங்குவதற்காண ஏற்பாடுகளை மேற்கொண்டுளளதாக தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள செட்டிக்குளம் மெனிக்பாம் வலையம்1, வலையம்2, வலையம்3, வலையம்4 ஆகிய கிராம மக்களையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் இன்று (04-02-11) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
செட்டிக்குளம் கிராமத்தைச்சேர்ந்த சுமார் 800 குடும்பங்களைச்சேர்ந்த சுமார் 4000 பேர் வரை பாதிப்படைந்த நிலையில் அப்பகுதியில் உள்ள பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இடம்பெயர்ந்த நிலையில் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களின் நலன் கருதி ஒரு தொகுதி பால் மா பக்கற்றுக்கள்,பிஸ்கட் வகைகள் மற்று சமையல் பொருட்கள் ஆகியவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 Responses to மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டு உதவி வழங்கினார் நா.உ வினோ