Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் நிலைமை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக சாவகச்சேரி மருத்துவமனை வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது.

தற்போதைய நிலையில் அவரது ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலையும் மோசமடைந்துள்ளது.

பேசும் சக்தியை முற்றாக இழந்துள்ள அவர், யாரையும் அடையாளம் காண்பதிலும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளார். அதற்கு மேலாக தற்போது அவர் முற்றாக சுய நினைவை இழந்த நிலையில் காணப்படுகின்றார்.

அவரது கணவர் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை காலமானது தொடக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கமே அவரைப் பராமரித்து வருகின்றார்.

0 Responses to தேசியத் தலைவரின் தாயாரின் நிலை கவலைக்கிடம் - சுயநினைவை இழந்துள்ளார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com