Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை (இன அழிப்பு) பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் முன்னணி வல்லரசு நாடுகளின் ஆதரவுடனேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது என, லண்டன் கிங்ஸ்ரன் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் பற்றி முதன்மை விரிவுரையாளர் கலாநிதி அன்றூ கிக்கின்பொட்டம் (Dr Andrew Higginbottom - The Principal Lecturer in Politics/Human Rights - Kingston University) கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுவரை போர்க்குற்றம் பற்றி பேசிவந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த முள்ளிவாய்க்கால் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டபோது இனப்படுகொலை பற்றிப் பேச ஆரம்பித்திருப்பது முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாகும்.

இவ்வாறான ஒரு மேடையில் பிரித்தானியாவையும் மிகக் கடுமையாகக் கண்டித்து பேராசிரியர் ஒருவர் ஆற்றியுள்ள உரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும், அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையே திரும்பிப் பார்க்க வைத்த உரையாகவும் இருக்கின்றது.

லண்டன் ரபல்கர் சதுக்கத்தில் கடந்த 18ஆம் நாள் (18-05-2011) பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்த முள்ளவாய்க்கால் இன அழிப்பு நிகழ்வில், லண்டன் கிங்ஸ்ரன் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் பற்றி முதன்மை விரிவுரையாளர் கலாநிதி அன்றூ கிக்கின்பொட்டம் ஆற்றிய உரையின் தமிழாக்கம்:

இரண்டு வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களை நினைவுகூரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள கிடைத்தது பாக்கியம். 40 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ள போதிலும், ஒரு இலட்சத்து 46 இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போயுள்ளனர். இது மிகவும் கவலைக்குரியது. நாங்கள் இங்கே கூடியிருப்பது அவர்கள் எங்கே என வினவுவதற்கே.

கடந்த பல மாதங்களுக்கு முன்னர் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச இங்கு வந்தபோது போராட்டம் நடத்தி அவரை நாட்டைவிட்டு துரத்தி அடித்து அவர் எதிர்பாராத வரவேற்பைக் கொடுத்த தமிழ் மக்களுடன் இணைந்திருப்பதையிட்டு நான் பெருமையமைகின்றேன்.

இவரைப்போன்றே மற்றொரு சர்வாதிகாரியும், பல்லாயிரக்கணக்கில் பொதுமக்களைப் படுகொலை செய்தவருமான முன்னாள் கொலம்பிய அரச அதிபர் இந்த வார இறுதியில் இங்கு வருகின்றார். அவருக்கும் உங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்பினால் எம்முடன் அந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுங்கள்.

வன்னியில் இறுதிப்போர் நிறைவு பெறுவதற்கு முன்னரே நீங்கள் பாரிய போராட்டங்களை நடத்தியிருந்தீர்கள், உங்களின் உறவினர்கள் தாம் குறுகிய நிலப்பரப்பிற்குள் சென்றுகொண்டிருப்பதைத் தெரிவித்த காரணத்தினால், நீங்கள் அந்த அபாயத்தை உணர்ந்து பிரித்தானிய அரசியல்வாதிகளுக்கும் அதனைத் தெரிவித்திருந்தீர்கள். குறிப்பாக ஊடகங்களுக்கும் அதனைத் தெரியப்படுத்தியதை நான் இப்பொழுதும் நினைவில் வைத்திருக்கின்றேன்.

தமிழ் மக்கள் மீதான இந்த இனப்படுகொலை பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் முன்னணி வல்லரசு நாடுகளின் ஆதரவுடனேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது என்பதை நான் இங்க கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஏனெனில் அங்கு ஒரு போர் நிறுத்தம் நிலவியிருந்தது. அந்தக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவினர் இங்கு (பிரித்தானிவிற்கு) வருவதற்கு நுழைவிட அனுமதி (வீசா) அனுமதி மறுக்கப்பட்டதுடன், அவர்களை ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாக பிரித்தானியா, அமெரிக்கா போன்றவற்றின் தலைமையில் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது.

இந்த போர் நிறுத்தம் முறிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராஜபக்சவினால் படுகொலை செய்யப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. எனவே அமைதிப்பேச்சை முறித்து இடம்பெற்ற இந்தப் படுகொலையில் மேற்குல நாடுகளும் பங்குகொண்டன என்றே கூற வேண்டும். இதுவொரு திட்டமிட்ட இன அழிப்பு. அதுவும் வன்னியில் என்ன நடைபெறுகின்றன என்பதை நன்றாக அறிந்துகொண்ட முக்கிய வல்லரசுகள் பங்குகொண்ட ஒரு இன அழிப்பாகும்.

இந்த நாடுகளிடம் செய்கோள் இருக்கின்து. நவீன தொலைத்தொடர்பு வசதிகள் இருக்கின்றன. இந்த நாடுகளே இவ்வாறான ஒரு இனப்படுகொலைக்கான அரசியல் களத்தை உருவாக்கிக் கொடுத்திருந்தன. என்ன நடக்கின்றது என்பதை நன்றாக அறிந்திருந்தும் அதனைத் தடுப்பதற்கு இவர்கள் (மேற்குல நாடுகள்) எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

நான் உங்களை மதிக்கிறேன். நீங்கள் கோரும் தமிழீழத்தை மதிக்கின்றேன். இந்த தமிழீழத்திற்காக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் பறிக்கப்பட்டதை மதிக்கின்றேன்.

நான் ஒரு பிரித்தானியப் பிரசை. ஆனால் நாங்கள் இங்கு கூடியிருப்பது அரசாட்சியை (மன்னராட்சியை) கொண்டாடுவதற்கே என கண்டனமாகத் தெரிவித்த அவர். ரபல்கர் சதுக்கத்தில் இருந்த மன்னர் ஹென்றி ஹவ்லொக்கின் (Henry Havelock) சிலையைச் சுட்டிக்காட்டிய விரிவுரையாளர் கலாநிதி அன்றூ கிக்கின்பொட்டம் (Dr Andrew Higginbottom) 1857ஆம் ஆண்டு இதே மன்னரால் பல்லியிரக்கணக்கான, குறைந்தது 10 மில்லியன் இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டனர் எனக் கண்டனம் தெரிவித்தார்.

சதுக்கத்தில் மேடைக்குப் பின்னால் இருந்த சிங்கங்களைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தச் சிங்கங்கள் அரசாட்சியின் சின்னங்களாக இருக்கின்றன எனக் கூறியதுடன், தான் பிரித்தானிய அரசாட்சிக்கு மிக அவதானமாகத் தெரிவிக்கும் கருத்து எனக் கூறிவிட்டு, சிங்கங்கள் எனக்குப் பின்னால் இருக்கின்றன, ஆனால் புலிகள் எனக்கு முன்னான் இருக்கின்றார்கள் என மக்களையும், அவர்கள் தாங்கி நின்ற தேசியக் கொடிகளையும் பார்த்துக் கூறியபொது மக்கள் ஆரவாரித்தனர்.

இறுதிவரை அடக்குமுறையைத் தாங்கிநின்ற வன்னி மக்களையும், அந்த மண்ணையும் எண்ணி நாங்கள் பெருமிதம்கொள்ள வேண்டும். எனவே தமிழீழம் என்ற ஒரே கொள்கைக்காக நாம் தொடர்ந்து போரட வேண்டும் என, லண்டன் கிங்ஸ்ரன் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் பற்றி முதன்மை விரிவுரையாளர் கலாநிதி அன்றூ கிக்கின்பொட்டம் (Dr Andrew Higginbottom - The Principal Lecturer in Politics/Human Rights - Kingston University) தெரிவித்தார்.

0 Responses to தமிழனப் படுகொலை அனைத்துலகால் திட்டமிடப்பட்டிருந்தது – பேராசிரியர் அன்றூ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com