இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசு மீது, ஐ.நா. சபை போர்க் குற்றவாளி என்று அறிவித்து, விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு ஐ.நா. சபையை வற்புறுத்த வேண்டும் என்றும், மேலும் தமிழர்களுக்கு சிங்கள அரசு துன்பம் விளைவிப்பதைத் தடுக்கவும் தமிழர்களுக்குப் பாதுகாப்பான நிலை ஏற்படுத்தவும் இலங்கை அரசு மீது பிற நாடுகளோடு சேர்ந்து இந்திய அரசும் பொருளாதாரத் தடை கொண்டு வர வேண்டும் என்றும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் மிகவும் வரவேற்கத் தக்கதாகும்.
சட்டமன்றத்தில் ஒருமனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது, தமிழகத்திலும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறது.
இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



இளமாறன்
ஜெயலலிதா அவர்களுக்கு தமிழர்கள் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். கருணாநிதி செய்ய யோசித்த கொண்டிருந்ததை (காங்கிரேஸ்க்கு பயந்து)ஜெயா அவர்கள் சாதாரணமாக செய்து விட்டத்தை மனதார பாராட்டியே ஆக வேண்டும். நெடுமாறன் கூறியது போல , ஜெயா அவர்களின் நண்பர் குஜராத் முதலமைச்சர் மோடி அவர்களையும் வலியுறுத்தி இது போன்றதொரு தீர்மானத்தை பிஜேபி ஆளும் மாநிலங்களும் கொண்டு வந்தால், மத்திய அரசுக்கு அச்சம் இருக்கும். மேலும் விடுதலை புலிகளின் மேல் தடை வர காரணமான ஜெயா அவர்கள் அதை நீக்க ஆதரவு தந்தால், வைகோ அவர்களின் முயற்சிக்கு உந்து சக்தியாக இருக்கும் , மேலும் , தமிழினம் அவரை என்றும் மறக்காது , அப்படி செய்தால் , அவரே உலக தமிழின தலைவியாக போற்றப் படுவார்.