இறுதி யுத்தத்தின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்கு விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குழுவினர் மறைமுகமாக பயன்படுத்தப்பட்டதாக இலங்கை இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
அரசாங்கத்தின் யுத்த வெற்றியின் அனுபவ பகிர்வின் மாநாடு தற்போது இடம்பெற்று வருகிறது. இந்த மாநாட்டில் உரையாற்றிய இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சாகி கலகே இதனை தெரிவித்துள்ளார்.
GTV News
யுத்தத்தின் போது கருணா தரப்பினரை இராணுவம் நேரடியாக பயன்படுத்தவில்லை எனினும் அந்த குழு மறைமுகமான முறையில் பயன்படுத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த தந்திரத்தில் இதுவும் ஒரு முக்கிய இராணுவ தந்திரமாக பயன்படுத்தப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒட்டுக்குழுவான கருணா குழுவும் இறுதிப் போரில்! - ஒத்துக்கொள்ளும் இராணுவம் - GTV செய்திகள்
பதிந்தவர்:
தம்பியன்
01 June 2011



0 Responses to ஒட்டுக்குழுவான கருணா குழுவும் இறுதிப் போரில்! - ஒத்துக்கொள்ளும் இராணுவம் - GTV செய்திகள்