சென்ற வாரம் வெள்ளவத்தைத் தமிழர்களைச் சந்தித்த இலங்கை அதிபர் ராஐபக்ச தான் தமிழில் பேசப் போவதாகச் சொன்னார். மக்கள் ஆம், இல்லை என்று சொல்லாமல் வாயை மூடிக் கொண்டு இருந்தனர். அவர் பேசிய தமிழ் அவருக்கே புரியாத மொழியாக இருந்தது.
சிறிது இடைவேளைக்குப் பிறகு அவர் சிங்களத்தில் பேசத் தொடங்கினார். அவர் சொன்ன செய்தி முதலாவதாக எனக்கு தமிழ் உறவினர்கள் இருக்கிறார்கள் என்பதாகும். அவருடைய சகோதரி நிருபமா ராஐபக்சவை ஒரு கொழும்புத் தமிழரான வர்த்தகர் நடேசன் திருமணம் செய்திருக்கிறார்.
ராஐபக்சவின் தமிழ் உறவினர்கள் என்றால் இந்த நடேசன் மாத்திரமே. ராஐபக்சவுக்குத் தெரிந்த தமிழ் கூட இந்த நடேசனுக்குத் தெரியாது. அவர் காலஞ்சென்ற லக்ஷமன் கதிர்காமரைப் போல் தமிழ்ப் பெயர் பூண்ட சிங்களவராவார்.
ராஐபக்ச கூறிய இரண்டாவது செய்தி புலம்பெயர் தமிழர்களை நோக்கியதாகும். இலங்கை அரசிற்கு எதிராகப் பிரசாரம் செய்யாதீர்கள். தமிழர்களை நாம் மிகவும் மதிப்பு மரியாதையுடன் நடத்துகிறோம் அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அவர்களுக்கு ஒரு குறையும் இல்லை நாட்டில் இயல்பு நிலை திரும்பி விட்டது.
அரசு பெருஞ் செலவில் வடக்கு கிழக்கில் தமிழர்களின் சுபீட்சத்திற்காக மேம் பாட்டுத் திட்டங்களை ஆரம்பித்துத் தமிழரின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. மிக விரைவில் அரசியல் உரிமைகளையும் வழங்கி விடுவோம்.
ராஐபக்சவின் கதையைக் கேட்டபோது ஒரு தமிழ்ப் பழமொழி நினைவுக்கு வருகிறது. கேள்வரகில் தேன் வடிகிறதென்றால் கேட்பார் புத்தி எங்கே போய்விட்டது.?
வெள்ளவத்தை உரையின் இறுதிப் பகுதியில் வடக்கு கிழக்கை வந்து பார்க்கும்படி அவர் புலம்பெயர் தமிழர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார்.
வெளிநாடுகளில் இருந்து வடக்கு கிழக்கிற்கு வரும் தமிழர்கள் வடக்கு கிழக்கில் ஆட்சி செய்யும் சிங்கள இராணுவத்தால் பல கெடுபிடிகளுக்கு உட்படுததப் படுகிறார்கள். அவர்கள் விசாரணை என்ற பெயரால் இம்சைப் படுத்தப்படுகிறார்கள். உள்ளூர்த் தமிழர்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
யாழ் குடாவில் சிங்களமயப் படுத்தல் என்ற திட்டத்தின் கீழ் சிங்களக் குடியேற்றம் நடக்கிறது. கிளிநொச்சித் தெருவுக்கு “மகிந்த ராஐபக்ச மாவத்தை”என்ற சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெயர் பலகை இராணுவத்தால் இரவு பகலாகக் காவல் செய்யப்படுகிறது.
மட்டகளப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் துரித கதியில் சிங்களக் குடியேற்றம் அரச அதிகாரிகள், புத்த பிக்குகள், தமிழ்க் குழுக்குள் ஆகியோரின் மேற்பார்வையில் நடக்கின்றன. எதிர்ப்புக் குரல்கள் நசுக்கப்பட்டுள்ளன.
திருகோணமலையில் இருந்து மட்டகளப்பு வரை செல்லும் கரையோரப் பாதையிலுள்ள அனைத்து இந்துக் கோயில்களும் புத்த கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன. கரையோர மீன்பிடியும் ஆழ்கடல் மீன்பிடியும் சிங்களவர்கள் வசமாகியுள்ளது.
பருத்தித்துறையில் இருந்து முல்லைத்தீவு வரையிலான கடலில் மீன் பிடிக்கும் உரிமை சிங்களக் கடற்படைக் பாதுகாப்புடன் சிங்கள மீனவர்களின் கைகளுக்கு மாறிவிட்டது.
வடக்கு கிழக்கில் நிரந்தர இராணுவ முகாம்களும் படையினர் குடியிருப்புக்களும். சீன அரசின் பங்காளியுடன் கட்டியெழுப்பப் பட்டுள்ளன. வவுனியா மாவ்டத்தின் கனகராயன் குளம் பிரதேசத்தில் 200 ஏக்கர் நிலத்தை உள்ளடக்கிய பிரமாண்டமான இராணவ முகாம் கட்டப்பட்டுள்ளது.
வன்னியின் முறிகண்டியில் படையினருக்கு சீன அரசு வீடுகளைக் கட்டிக் கொடுக்கிறது. 50.000 வீடு கட்டித் தருவோம் என்ற இந்திய அரசு ஈழத் தமிழர்களை மீண்டும் ஏமாற்றி விட்டது. எங்கே இயல்பு நிலை எங்கே மேம்பாட்டுத் திட்டம் என்று ராஐபக்சவைக் கேட்கிறோம்.
மகிந்த ராஐபக்ச குறிப்பிடும் இயல்பு நிலையும் மேம்பாடும் எங்கே? - ஆய்வு
பதிந்தவர்:
தம்பியன்
01 June 2011



0 Responses to மகிந்த ராஐபக்ச குறிப்பிடும் இயல்பு நிலையும் மேம்பாடும் எங்கே? - ஆய்வு