Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 11 வது சர்வதேச மாநாடு எவ்ரி அகோர மண்டபத்தில் 24 சனி 25 ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

முலாவது நாள் நிகழ்வுகளை தென்னாபிரிக்க பிரதிநிதி திரு.மிக்கி செட்டி நாடாவை வெட்டி திறந்து வைக்க மாநாட்டு தலைவர் சரவணையூர்.விசு செல்வராசா கொடியை ஏத்தி மாநாட்டை ஆரம்பித்து.வைத்தார்.

இந்த மாநாட்டில் மலேசியா, தென்னாபிரிக்கா மற்றும் கனடா, அமெரிக்கா, இலங்கை, தமிழ்நாடு, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் உலகநாடுகளில் இருந்து பல அறிஞர்கள் கலந்து கொண்டதுடன்,

தாயகத்தில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு. மாவை சேனாதிராசா, திரு.சிவஞானம் சிறிதரன், திரு .யோகேஸ்வரன் ஆகியோருடன்,

இலங்கையின் மொழி அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் மோகன், நீதி அமைச்சிலிருந்து பேராசிரியர் அபுசாலி ஆகியோர் கலந்து கொண்டு உரை ஆற்றினர்.

ஜெர்மனியில் இருந்து வந்த திரு. அன்ரன் மிகவும் சிறப்பான ஆவண கண்காட்சியை அமைத்து இருந்தார்.

முதலாம் நாள் நிகழ்வுகள் பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பித்து இரவு 9.00 மணிக்கு முடிவடைந்தது. இந்த நிகழ்வில் கவியரங்கம், ஆய்வரங்கம் என மாநாடு வண. தனிநாயகம் அடிகளார் அரங்கில் களைகட்டியது.

இரண்டாம் நாள் நிகழ்வுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு மாவை சேனாதிராசா அவர்கள் குத்து விளக்கு ஏற்றி காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்க மாநாடு இரவு 9.00 மணி வரை இடம்பெற்றது.

சிறப்புரைகள், கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம் ஆகிய நிகழ்வுகளுடன் மலேசியாவில் இருந்து வந்த நடனக் கலைஞர்களின் பரதநாட்டியம், கனடாவில் இருந்து வந்த நடனக் கலைஞர்களின் பரத நாட்டியம், திருமதி லியோனி, திருமதி கற்பகம் மற்றும் பாரிஸ் கலைஞர்களின் பரத நிகழ்வுகள் அரங்கை சிறப்பிக்க, தமிழ் தொலைகாட்சி கலைஞர்கள் இரா.குணாளன் லோகதாஸ் ஆகியோர் வழங்கிய மண்ணைத்தேடி நாடகம் அரங்கில் இருந்தோரை கண்கலங்க வைத்தது.

அத்துடன் திருமறை கலாமன்றம், பாசையூர் முத்தமிழ் கலாமன்றம் வழங்கிய நாட்டு கூத்து போன்ற அற்புதமான கலை நிகழ்வுகளுடன் மாநாடு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

0 Responses to உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 11 வது சர்வதேச மாநாடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com