15க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மதிமுகவின் திறந்தவெளி மாநாடு நேற்று இரவு (15.9.2011) நெல்லையில் நடந்தது.
வைகோ, நாஞ்சில்சம்பத், மல்லைசத்யா, பேராசிரியர் பெரியார்தாசன் உட்பட பலர் இம்மாநாட்டில் சிறப்புரையாற்றினர்.
நெல்லை மாநாடு எனக்கு திருப்பு முனையாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இவ்வளவு பெரிய கூட்டம் கூடி எனக்கு இவ்வளவு பெரிய திருப்பு முனையாக இருக்கும் நினைக்கவில்லை என்று கூறிய வைகோ,
நெல்லை மாவட்ட மதிமுக செயலாளர் சரவணன், துணைச்செயலாளர் மின்னல் முகமது அலி, அரசியல்குழு உறுப்பினர் நிஜாம், மாநகர மாவட்ட செயலாளர் பெருமாள் போன்றோருக்கு தனிப்பட்ட வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இரவு 11.40க்கு மைக் பிடித்த வைகோ நள்ளிரவு 1.55க்கு தனது உரையை நிறைவு செய்தார். அவரது
உரைவீச்சில் இருந்து சில துளிகள்:
’’நான் அண்ணா அல்ல; என்னால் அண்ணா ஆகிவிடவும் முடியாது. என் பின்னால் வருபவர்கள் வியர்வைத்துளிகள், கண்ணீர்த்துளிகள், ரத்தத்துளிகள் சிந்துவதற்கு சித்தமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் என்னை பின் தொடரலாம்.
நிகழ்ச்சி மட்டுமல்ல; நேரமும் சுறுக்கமாக இருக்கிறது. இரண்டு பெரிய கழகங்களுக்கும் சொல்லிக்கொள்வேன். எங்கள் அண்ணாவை சொந்தம் கொண்டாட முடியாது.
அரசு மருத்துவமனைகளில் அமைச்சரோ, அல்லது தலைமை அமைச்சரோ போய் சிகிச்ச்சை எடுத்துக்கொண்டால்தான் மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படக்கூடிய சூழ்நிலையில் இருக்கும். அதிகாரத்தை மதிமுக கைப்பற்றியே தீரும்.
தமிழ்நாட்டில் 2016ல் ஆட்சி பீடத்தில் மதிமுக உட்காரும். 1994ல் எங்கள் தலையில் பெரியி இடியே விழுந்தது. ஸ்டெர்லைட் என்கிற அந்த ஆலை தொடர்பாக நீதிமன்றத்தின் மூலம் ஆலையை மூடுவதற்கான முயற்சிகளோடு போராடிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கொடுத்த அறிக்கையோ ஆலைக்கு முழுக்க முழுக்க ஆதரவாக உள்ளது. அந்த அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது. பேரறிவாளன், சாந்தன், முருகன் மூன்று பேரின் மரண தண்டனையை நீக்க வேண்டுமானால் அமைச்சரவை கூடி முடிவெடுக்க வேண்டும். அதுதான் தீர்வாக இருக்கும். அதற்கான கோரிக்கையை நாங்கள் முன் வைத்திருக்கிறோம்.’’



0 Responses to நான் அண்ணா அல்ல, அண்ணா ஆகிவிடவும் முடியாது: வைகோ பேச்சு