Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி போர் முடிவுக்கு வந்தபின்னர் இலங்கை இராணுவத்தை ஆப்கானிஸ்தானில் பயன்படுத்துவது குறித்து ஆலோசித்துள்ளாராம் ரோபேட் ஓ பிளேக். இந்த அதிரடித் தகவல்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது.

அதாவது மனித உரிமை மீறல், இலங்கையில் போர் குற்றம் நடைபெற்றுள்ளது, தம்மிடம் செய்மதிப் புகைப்படங்கள் இருக்கிறது என்று எல்லாம் கதை கதையாகச் சொல்லி இலங்கையை மிரட்டுவதுபோல நாடகமாடும் இதே அமெரிக்கா இலங்கை இராணுவத்தைப் பாராட்டியுள்ளதும் போதாது என்று அதனை ஆப்கானிஸ்தானில் பாவிப்பது பற்றியும் அவர்கள் அனுபவத்தை ஆப்கானிஸ்தானில் பகிர்ந்துகொள்வதுபற்றியும் ஆராய்ந்துள்ளனர்.

இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் விசாரிக்கப்படவேண்டும் எனத் தெரிவித்துவரும் அமெரிக்கா அதே நாட்டு இராணுவத்திடம் இருந்து அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள நினைத்திருக்கிறது என்றால் அது எந்தவகையில் நியாயமாகும்?

மற்றுமொருமுறை அமெரிக்காவின் இரட்டைவேடம் அம்பலமாகியுள்ளது. அதாவது இலங்கை அரசாங்கம் சீனாவுடன் பலமான உறவுகளைப் பேணி வந்தாலும் கோத்தபாய ராஜபக்ஷ அங்கே ஒருபோதும் சென்றதில்லையே.

அவர் மாறாக அமெரிக்காவுக்குத் தான் சென்றுவருகிறார். இதன் பின்னணியில் என்ன இருக்கிறது ? ரோபேட் ஓ பிளேக் போன்ற ராஜதந்திரிகள் பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறி கடும்போக்கைக் கையாள்வதும், பின்னர் நிலமை மோசமடைந்தால் அந்த நாடு போர்குற்றத்தில் ஈடுபட்டது எனக் கூறி மற்றைய பகுதியினரை சாந்தப்படுத்துவதிலும் காலத்தை கழிக்கின்றனர்.

இறுதிப்போர் நடைபெற்ற வேளையில் அமெரிக்க கப்பல் ஒன்றுவந்து அகதிகளையும் புலிகளின் மூத்த தளபதிகள் சிலரையும் ஏற்றிச்செல்லும் என்ற வதந்திகளையும் திட்டமிட்டே அமெரிக்கா பரப்பிவந்துள்ளதும் இதற்கு சில அமெரிக்க தமிழர்கள் உடந்தையாக இருந்ததும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக ஒரு தீர்வுத் திட்டத்தை இலங்கை கொடுக்கவேண்டும் என்பதனையும் அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதனையும் மிகவும் சூட்சமமாகச் சொல்லிச் சென்றுள்ளார் ரோபேட் ஓ பிளேக் அவர்கள். இலங்கை சென்ற ரோபேட் ஓ பிளேக்கை இம் முறை இலங்கை அரசு கண்டுகொள்ளாமல் அவமானப்படுத்தி அனுப்பியமைக்கும் காரணங்கள் உண்டு என்று சொல்லப்படுகிறது.

அமெரிக்காவும் இலங்கையும் சேர்ந்து புலிகளுக்கு எதிரான போரை முன்னெடுத்ததாகவும் ஆனால் தற்போது அமெரிக்காவை விடுத்து இலங்கை சீனாவுடன் உறவுகளை வளர்த்துக்கொண்டு செல்வதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்திருக்கும் அமெரிக்கா இலங்கை மீது சில அழுத்தங்களைப் பிரயோகிப்பது போல நடிப்பதும் தனது நேச நாடுகளூடாக இலங்கைக்கு நெருக்குதலைக் கொடுப்பதையுமே தற்போது செய்துவருகிறது.

ஆனால் வெளுத்தது எல்லாம் பால் என நம்பி பல தமிழர்கள் அமெரிக்கா தமது நண்பர் என நினைப்பதும் அந் நாடு தமக்கு ஏதாவது செய்யும் என நம்புவதும் தமிழர்கள் தம் தலையில் தாமே மண்ணை வாரிப் போடுவதற்கு சமமாகும். இறுதிக்கட்டப் போரில் நோர்வே, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் விடுதலைப் புலிகளின் தலைமையோடு பேசி அவர்களுக்கு பல உறுதிமொழிகளை வழங்கியுள்ளது.

வல்லரசு நாடுகளின் உறுதிமொழிகள் சிலவற்றை நம்பியது தான் விடுதலைப் புலிகளின் இரண்டாம் நிலைத் தளபதிகள் சிலர் செய்த தவறாக அமைந்துவிட்டது. இருப்பினும் தேசிய தலைமை ஒரு நேர்கோட்டில் தீர்க்கமான முடிவு ஒன்றுடன் இறுக்கமாக இறுதிவரை செயல்பட்டது உண்மையாகும்.

எது எவ்வாறு இருப்பினும் அமெரிக்கா நோர்வே மற்றும் பிரித்தானிய அரசுகளை எமது போராட்டத்துக்கு நம்புவதும், அவர்கள் தமது அரசியல் நலனுக்காக தமிழர்களைப் பகடைக்காய்களாகப் பாவிப்பதும் உணரப்படவேண்டிய விடையமாகும். எமது விடுதலைப் போராட்டம் நாடுகளைச் சார்ந்து நிற்காது எமது புலம்பெயர் மக்களின் பலத்தில் கொண்டுசெல்லப்படவேண்டும். அதுவே எமக்கு ஒரு சாதகமான நிலையைத் தோற்றுவிக்கும்.

அதிர்வு

1 Response to விக்கி லீக்சின் அதிரடித் தகவல்: ஆடிப்போயுள்ள பிளேக்!

  1. Wonderfully written

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com