ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி சவேந்திர சில்வாவுக்கு, ஐ.நா அமைதிகாக்கும் படையின் உயர் பதவியொன்று வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நாவின் அமைதி காக்கும் படையின் விசேட ஆலோசனை குழு பிரதிநிதிகளில் ஒருவராக சவேந்திர சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இப்பதவிக்காக முதல் தடவையாக இலங்கையர் ஒருவர் தெரிவாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா நாடுகளின் அமைதி காக்கும் படையின் ஆலோசனை குழுவின் முதல் கூட்டத்தொடர் இந்த மாதம் நடைபெறவுள்ளது. ஐ.நா அமைதி காக்கும் படையில் இடம்பெற்ற இலங்கை இராணுவத்தினர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஹெய்டியில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் தொடர்பு பட்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்ததும்,
இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, இலங்கை இராணுவத்தினரை வழிநடத்திய பிரதானமானவர்களில் சவேந்திர சில்வா ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



0 Responses to போர்க் குற்றவாளியான சவேந்திரசில்வாவுக்கு ஐ.நாவில் உயர் பதவி?