Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம், ஜப்பானை துவம்சம் செய்த சுனாமி மற்றும் நிலநடுக்கத்தினால், 30,000 ற்கு மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததையும், ஒரு இலட்சம் ஜப்பனியர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியிருந்ததை அறிந்திருப்பீர்கள்.

புகுஷுமா அணு உலைகள் உட்பட ஜப்பானின் பெரும்பாலான தெற்கு நகரங்கள் முற்றாக அழிவடைந்திருந்த கொடூர நிகழ்வது. எப்படி இதிலிருந்து ஜப்பான் மீளப்போகிறது என உலகம் மீண்டும் ஒரு முறை கேள்விக்குறியோடு தொடக்கியது. இதோ! இப்படித்தான் என 11 மாதங்களில் அதற்குரிய பதிலை தந்திருக்கிறது.

சுனாமி மற்றும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட மொத்த அழிவு: 300 பில்லியன் USD. ஆனால் இந்த மீள் கட்டுமாண பணிகளுக்கு ஜப்பான் அரசு செலவிட்டது 50 பில்லியன் USD. மற்றும் படி 11 மாதம் ஜப்பானியர்களின் அயராத தொடர் உழைப்பு தான் இந்த மாற்றத்திற்கு காரணம்.

கவனிக்க : ஹிரோஷிமா, நாகஷாயி நகரங்கள் அமெரிக்க அணுகுண்டுவீச்சினால் முற்றாக அழிவடைந்திருந்ததை அடுத்து, ஜப்பான் மீள் கட்டுமாண பணிகளுக்காக ஒதுக்கிய தொகைக்கு அடுத்தபடியாக, இரண்டாவது தடவையாக இந்த சுனாமி அனர்த்தத்திற்கே இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கியிருந்தது.

0 Responses to ஜப்பான் 11 மாதங்களில் உயிர்ப்பித்த சுனாமி நகரங்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com