சட்டசபையில் விஜயகாந்த் பேசிய விதம் கீழ்தரமானது என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,
அதிமுகவுடன் கூட்டு இல்லாதிருந்தால் தேமுதிகவுக்கு ஒரு இடம் கூட கிடைத்திருக்காது. அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தேமுதிகவுக்கு எதிர்க்கட்சி தகுதி கிடைத்தது. அதிமுகவினரை திருப்திபடுத்தவே தேமுதிகவோடு விருப்பமின்றி கூட்டணி ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார்.
தகுதியில்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்கு வெட்கப்படுகிறேன். இனி தேமுதிகவுக்கு இறங்குமுகம்தான் என்றும் கூறியுள்ளார்.



0 Responses to தேமுதிகவுடனான கூட்டணிக்கு வெட்கப்படுகிறேன்: ஜெயலலிதா கண்டனம்