Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் ஆக்டோபர் மாதத்திலிருந்து கோவாவின் கடற்கரைகளில் புகைப்பிடிப்பதற்கு தடைச்சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

1997, 2003 புகையிலை தடைச்சட்டங்களின் கீழ், கோவாவின் புகையிலை கட்டுப்பாட்டு ஆணையகம் இந்நடைமுறையை அமல்படுத்தவுள்ளது. இச்சட்டத்தின் கீழ், பானாஜியின் மிராமார் கடற்கர முதலாவது பொதுவிடமாக இச்சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படவிருக்கிறது.

விழிப்புணர்வு என்பது மிக முக்கியமானது. ஆனால் நாங்கள் மிக பிரபலமான கலங்குட் கடற்கரையிலிருந்து இச்சட்டத்தை அமல்படுத்த தொடங்கினால், எதிர்ப்பு அதிகரித்துவிடும். அதனால் குறைவான சுற்றுலா பயணிகள் வந்து போகும், மிரமார் கடற்கரையிலிருந்து இந்த நடவடிக்கையை தொடங்குவதாக கோவா சுற்றுலாத்துறையின் துணை இயக்குனர் பாமலா மஸ்கரென்ஹாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சட்டத்தின் மூலம் கோவாவில் ஹூக்கா (Hookhas) மூலம் புகைப்பிடிப்பதற்கும் தடை கொண்டுவரப்படடுள்ளது. புகையிலை மாத்திரமல்லாது கைத்தொழில் இரசாயன நிகொடினும் டோக்சிஸ் இராசயனமும் அவற்றில் கலக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0 Responses to கோவா கடற்கரைகளில் புகைப்பிடிக்க தடை : அக்டோபரில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com