Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு, கிழக்கில் இராணுவத் தேடுதல்கள், சுற்றி வளைப்புக்களினால் மக்கள் நிம்மதியின்றி வாழ்ந்து வருவதாகவும், இவ்வாறான பதற்றமான சூழ்நிலையை அரசாங்கம் திட்டமிட்டு உருவாக்கியுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம் என்கிற போர்வையில்தான் ஏற்கனவே ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டது. உண்மையில் ஒரு ஒடுக்கப்பட்ட இனம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உரிமைகளைக் கேட்கின்றபோது, அதை பயங்கரவாதம் என்கின்ற பூச்சாண்டிக்குள் கொண்டுவருவதுதான் நாட்டிலே மாறி மாறி நடக்கின்ற துன்பியல் நிலையாக இருந்துகொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

அத்தோடு, வடக்கு கிழக்கில் எங்கும் எந்த நேரத்திலும் எவரும் சென்று வரலாம் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் வடக்கிலோ கிழக்கிலோ இருக்கின்ற மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்களா, என்றால் இல்லை. சுற்றிவளைப்பு இடம்பெறுகின்றது. அங்கே இருக்கின்ற மக்களை அவர்கள் பலாத்காரமாக சோதனை செய்கின்றார்கள். துப்பாக்கிச் சத்தம் இல்லை. ஆனால், சத்தம் இல்லாத அரச பயங்கரவாதம் அங்கே இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு என்ன நடந்தது? ஒரு தாயும் ஒரு மகளும் அங்கே கைது செய்யப்பட்டார்கள். கட்சியைப் பிரிக்கின்ற அரசாங்கம் இப்போது குடும்பத்தையும் பிரிக்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இந்த அவலங்களை கூறுகின்றபோது நாங்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றோம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to வடக்கு, கிழக்கில் அரசாங்கம் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது: பா.அரியநேந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com