இலங்கை மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாமைக்கு நன்றி தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
இந்தியாவில் உள்ளக அரசியல் அழுத்தங்கள் காணப்பட்ட போதிலும், ஐக்கிய நாடுகளில் இலங்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காது, இந்தியா நடுநிலை வகித்திருந்ததாகவும், அதற்கு நன்றி தெரிவித்தே இலங்கை ஜனாதிபதி கடிதத்தினை எழுதியுள்ளதாகவும் ‘தி ரைம்ஸ் ஒப் இந்தியா’ செய்தி வெளியிடுள்ளது.
2002- 2009 வரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தலைமையிலான குழுவினால் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானத்தையே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்து நிறைவேற்றியிருந்தன. குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிலிருந்து இந்தியா இறுதி நேரத்தில் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




0 Responses to ஐ.நா. தீர்மான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத இந்தியாவிற்கு, இலங்கை நன்றி தெரிவிப்பு!