இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவக்கு கிடைக்கப்பெற்ற தகவல்கள் போலியானவை என்று நிரூபிக்கும் பொருட்டே இலங்கை அரசாங்கம் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளையும், தமிழர்களையும் தடை செய்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அவர், தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து புலம்பெயர்ந்த அமைப்புகள் தொடர்பான ஆவணங்கள் கிடைக்கப்
பெற்றிருந்தால், அதனை முன்னதாகவே வெளியிட்டிருக்க வேண்டும்.
ஆனால் தற்போது அதனை வெளியிட்டிருப்பதானது, அமெரிக்காவின் பிரேரணையை நீர்த்து போகச் செய்வதற்கான இலங்கையின் முயற்சியாகவே கருதப்பட வேண்டி இருக்கிறது.
இலங்கையின் யுத்தக்குற்றங்கள் குறித்து ஆதாரங்களை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளே வழங்கி இருந்தன.
இந்த அமைப்புகள் மீது பயங்கரவாத முத்திரையை குத்திவிட்டால், அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற ஆதாரங்களும் போலியானவையாகவே இருக்கும் என்று நிரூபித்துவிடலாம் என்ற அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.




0 Responses to அமெரிக்கப் பிரேரணையை நீர்த்துப்போக வைக்கும் முயற்சியே புலம்பெயர்ந்தோர் தடைப் பட்டியல் - கஜேந்திரகுமார்