Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இனம் பிரச்சனை அவ்வளவு எளிதில் முடிவதாக இல்லை. அப்படத்தின் இயக்குனர் சந்தோஷ்சிவன் எங்களோடு ஒரு பொது விவாதத்திற்கு வந்து பேச வேண்டும்.

அப்படி பேசாதவரை அவர் ஒளிப்பதிவு செய்யும் எந்த படத்தையும் தமிழ்நாட்டில் நிம்மதியாக ரிலீஸ் செய்துவிட முடியாது என்று கூறியிருக்கிறது மே17 இயக்கம்.

ஒரு சதவீதம்தானே இவர்கள்? என் படத்தை என்ன செய்துவிட முடியும் என்று இனம் ரிலீசுக்கு முன்பு முணுமுணுத்த லிங்குசாமி, இந்த முறை முன்பு போல அலட்சியமாக இருக்கக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறாராம். அதன் விளைவாக லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘அஞ்சான் ’ படத்தில் ஒளிப்பதிவு செய்து வரும் சந்தோஷ்சிவன் அப்படத்திலிருந்து நீக்கப்படலாம் என்கிறார்கள்.

இது லிங்குசாமி மட்டுமல்ல, சூர்யாவும் சேர்ந்து எடுத்த முடிவுதானாம். அப்படியே இன்னொரு செய்தி. இந்த அஞ்சான் படத்தில் பாடல் எழுதுவதாக ஒப்புக் கொண்ட கவிஞர் அறிவுமதி, லிங்குசாமியின் போக்கு பிடிக்காமல் தனக்கு அவர் அனுப்பி வைத்த பாடலுக்கான மெட்டுகளை திருப்பி அனுப்பிவிட்டாராம். அதுதான் கோடம்பாக்கத்தின் ஹாட் இப்போது.

0 Responses to வெளியேற்றப்படுகிறார் சந்தோஷ்சிவன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com