Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் சோனியாவை எதிர்த்து போட்டியிடவிருந்த ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரான உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதொ பக்ருதீன் தனது வேட்பு மனுவைத் திரும்பி பெற்றுள்ளார்.

இதற்கான காரணம் இன்னமும் தெரியவில்லை. எனினும் இது கட்சியின்  முடிவல்ல என தெரிகிறது.

இதையடுத்து சமூக ஆர்வலர் அர்ச்சனா சிறீவஸ்தாவை ரேபரேலி தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளராக களமிறக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகர் குமார் பிஸ்வாஸ் போட்டியிடுகிறார். இதனிடையே அமேதி தொகுதியில் பிஜேபி சார்பில் வழக்கறிஞர் அஜய் அகர்வால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நரேந்திர மோடி போட்டியிடும் வதோரா தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் அர்விந்த் கேஜ்ரிவால் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சோனியா காந்தியை எதிர்த்த ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் திடீர் விலகல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com