Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் சுயலாபம் அடையும் முக்கியமான நாடு என்றால் அது இந்தியா மட்டுமே என்பது யாவரும் அறிந்த உண்மை.

வெற்று பேச்சும் அரசியல் நாடகமும் நடத்திக்கொண்டிருக்கும் இந்திய அரசியல்வாதிகளுக்கு தற்போது பயம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக சொல்லப் போனால் இந்தியாவிலும் ஒரு முதல்வரை தெரிவு செய்வது இலங்கை தமிழர்கள் என்ற நிலை இருந்ததை யாவரும் அறிவோம் .

அவர்கள் அனைவரும் இலங்கை தமிழர்களின் கொலை மனித உரிமை மீறல் போன்றவற்றை காட்டியே வாக்குகள் சேர்த்தார்கள் என்பதே உண்மை.

இன்று என் மக்கள் என் இரத்தம் என்று கூத்தடிக்கும் அரசியல்வாதிகளுக்கு நல்ல சந்தர்ப்பம் வந்துள்ளது மஹிந்த ஆட்சியில் உங்களுக்கு வரமுடியாது என்று கூறியவர்கள் இன்று இந்த புதிய அரசாங்கத்திடம் ஏன் கேட்கவில்லை? குறிப்பாக சீமான் போன்றவர்கள் ஏன் இதுவரைக்கும் வாய் திறக்க வில்லை.

இவர்கள் கேட்டால் உடனடியாக வந்து பார்வையிடுமாறு இந்த அரசு கூறும் அதன் காரணமாக தான் இவர்களால் அதை இனி கேட்க முடியாது. இலங்கை தமிழர்களுக்கு நல்ல தீர்வு வருதோ இல்லையோ ஆனால் இந்தியா அரசியல் வாதிகளுக்கு பாரிய ஆப்பு என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

இனியாவது தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தின் நல்ல ஒரு தீர்வுக்கு தலை சாய்க்க வேண்டும். இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார் தங்களை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டாம்!  ஆனால் எங்களுடைய கோமாளி கூட்டத்துக்கு அது தெரியாது போல, மக்கள் இனி சற்று அவதானமாக இருக்க வேண்டும்.

இன்றில் இருந்து அவர்கள் செய்யும் நடவடிக்கைகளை அவதானிக்க வேண்டும்.  தங்கள் செய்யும் வேலைகள் தொடர்பான தகவலை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இல்லாவிடின் மஹிந்த சொன்ன மாதிரி பின் வாசல் கதையை இந்த மைத்திரி சொல்லி விடுவார்.

இவர்கள் என்ன செய்தாலும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் இல்லை என்றால் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். தற்போது மக்கள் மாஜா ஜால அரசியல் வாதிகளை புறக்கணிப்பது என்பது அவர்கள் கடந்த காலங்களில் மஹிந்த மாமாவோட சேர்ந்து சுருட்டிய எல்லாம் மக்கள் அறிந்து விட்டார்கள் என்பதே தெளிவு .

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சிறந்த ஒரு தீர்வு அவசியம் அதை இனிமேல் தமிழ் மக்கள் தவற  விடக்கூடாது.

0 Responses to மைத்திரி அரசு, தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல அரசியல் தீர்வு வழங்கினால் இந்தியாவின் நிலை என்ன?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com