Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு தடுப்பணைக் கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய ராமதாஸ், கர்நாடக அரசு மேகதாதுவில் தடுப்பணைக் கட்டினால், தமிழகத்துக்கு அரைகுறையாக வந்துக் கொண்டு இருக்கும் தண்ணீர் கூட இனி கிடைக்காது. என்னதான் கர்நாடகாவில் மழைக் கொட்டித் தீர்த்தாலும் அது அவர்கள் கட்டும் தடுப்பணைக்குச் சென்று விடும்.

எனவே, இதுத் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஆலோசித்து தீர்மானம் நிறைவேறி, கர்நாடக அரசுக்கு தமிழகத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்பைக் காண்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.அதோடு இதுக்குறித்து தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பிரதமரை சந்தித்து கர்நாடக அரசு தடுப்பனைக் கட்டக்கூடாது என்கிற தமிழகத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

0 Responses to கர்நாடக அரசு தடுப்பணைக் கட்டுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com