Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருகோணமலை சம்பூர் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் 234 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சனிக்கிழமை மாலை வழங்கினார்.

அத்தோடு, சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

0 Responses to சம்பூரில் 234 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை மைத்திரி வழங்கினார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com