Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் பதவியை தனக்கு தருவார் என்கிற நம்பிக்கை தனக்கு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடம் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது தனக்குக் கோபம் ஏதுவும் இல்லை என்று கூறியுள்ள மஹிந்த ராஜபக்ஷ, “ஜனவரி 9ஆம் திகதி அதிகாலை நான் ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறியது மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு அல்ல. என்றாலும் மக்களின் வேண்டுகோளை புறக்கணிக்க முடியாத நிலையில் மீண்டும் அரசியலுக்கு பிரவேசித்துள்ளேன். என் மீது மக்கள் அன்று வைத்திருந்த அன்பு இன்னும் அதேபோன்று உள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to மைத்திரி எனக்கு பிரதமர் பதவி தருவார்: மஹிந்த நம்பிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com