உணவுக்காக மாடுகள் அறுப்பதைத் தடை செய்ய அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
உணவுக்காக மாடுகள் அறுப்பதை நிறுத்தவேண்டும் எனவும், தேவையானால் வெளிநாட்டில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அமைச்சரவைப் பேச்சாளர், “முஸ்லிம்கள் குர்பான் நிறைவேற்றுவதற்காக மாடுளை அறுக்கிறார்கள். மாடு அறுப்பது தொடர்பில் ஜனாதிபதி தனது கருத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் அரசாங்கம் அவ்வாறு எந்த முடிவும் எடுக்கவில்லை . அமைச்சரவையிலும் அது பற்றி ஆராயப்படவில்லை. இது தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் அமைச்சரவையில் எதுவும் பேசவில்லை.” என்றுள்ளார்.
உணவுக்காக மாடுகள் அறுப்பதை நிறுத்தவேண்டும் எனவும், தேவையானால் வெளிநாட்டில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அமைச்சரவைப் பேச்சாளர், “முஸ்லிம்கள் குர்பான் நிறைவேற்றுவதற்காக மாடுளை அறுக்கிறார்கள். மாடு அறுப்பது தொடர்பில் ஜனாதிபதி தனது கருத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் அரசாங்கம் அவ்வாறு எந்த முடிவும் எடுக்கவில்லை . அமைச்சரவையிலும் அது பற்றி ஆராயப்படவில்லை. இது தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் அமைச்சரவையில் எதுவும் பேசவில்லை.” என்றுள்ளார்.
0 Responses to உணவுக்காக மாடுகள் அறுப்பதைத் தடை செய்ய அரசு தீர்மானிக்கவில்லை: ராஜித சேனாரத்ன