Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றியமைத்து புதிய தேசிய பாதுகாப்பு கட்டமைப்பொன்றினூடான சட்டமொன்றைக் கொண்டுவருவது இலங்கையின் ஜனநாயகத்துக்கும், எதிர்காலத்துக்கும் நல்லது என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் அத்துல் கேஷாப் தெரிவித்துள்ளார்.

இலங்கை தன்னுடைய சரியான பயணத்தை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ச்சியான ஆதரவினை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வொன்று நேற்று திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே அமெரிக்கத் தூதர் மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

0 Responses to பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றியமைப்பது இலங்கையின் எதிர்காலத்துக்கு நல்லது: அமெரிக்கத் தூதர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com