Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் இன்று கை எழுத்தாகி உள்ளது. பரஸ்பரம் இரு நாடுகளும் ராணுவ தளங்களை பயன்படுத்திக்கொள்ளும் வகையில்இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தத்தில் இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் கைஎழுத்திட்டுள்ளனர்.

இந்தியா-அமெரிக்காஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் ராணுவ விமான தளங்கள், ராணுவ கப்பல் தளம், ராணுவ பாதுகாப்புப் படைத் தளம் போன்ற ராணுவ தளங்களை பரஸ்பரம் இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற வரைவு முறை ஒப்பந்தம் இரு நாட்டு சம்மதத்தின் படி தயார் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் தகவல் பராமரிப்பு, ராணுவ தர மேம்பாட்டு,விஷயங்கள்,  பயணம் உள்ளிட்டவைகள் போன்ற நடைமுறைகளை இரு நாட்டு ராணுவமும் இரு நாட்டு ராணுவ தளத்தில் நடத்திக்கொள்ளலாம் என்கிற ஒப்பந்தமே அது.

இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் வாஷிங்டனில் மனோகர் பாரிக்கர் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சருடன் இணைந்து கை எழுத்திட்டார்.இதனால் இரு நாட்டு வர்த்தகம், பொருளாதாரம் மேம்படும் என்று இருவரும் செய்தியாளர்களிடம் கூறினர்.

0 Responses to இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com