Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 31ஆம் திகதி வரவுள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தனியாக சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. 

எனினும், பான் கீ மூன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசவுள்ளதாகவும், அந்தச் சந்திப்பில் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்வாரா இல்லையா என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தகவல்கள் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இதனிடையே, யாழ்ப்பாணம் வரும் பான் கீ மூன், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்துப் பேசவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to விக்னேஸ்வரனை சந்திப்பதற்கு பான் கீ மூன் நேரம் ஒதுக்கவில்லை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com