Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மைத்திரி - பான் கீ மூன் சந்திப்பு!

பதிந்தவர்: தம்பியன் 02 September 2016

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது. 

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கையில் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

இதனிடையே, பான் கீ மூன் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் சென்றுள்ளார். அங்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தரப்பினருடன் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.

0 Responses to மைத்திரி - பான் கீ மூன் சந்திப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com