முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தம்மை துயரக்கடலில் ஆழ்த்தியதாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து பேரறிவாளன் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில்,
“என் தாயின் கரத்தை பற்றிக்கொண்டு கலங்காதீர்கள் உங்கள் மகன் தான் உங்களுடன் வந்து சேரப்போகின்றாரே என பரிவோடு என் தாயிடம் கூறியவர் முதல்வராக இருந்த ஜெயலலிதா.
அந்த வார்த்தை 23 ஆண்டுகளாக தன்னலம் கருதா தியாகத்திற்கு அங்கிகாரம் வழங்கியதாக இருந்து.
அதுமட்டுமல்லாது 2011ஆம் ஆண்டில் மூவர் உயிருக்காக சட்டப்பேரவை அவர் இயற்றிய தீர்மானம், 2014இல் 7பேரின் விடுதலைக்காக ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தை கையாண்ட விதமும், “திருவாளர்கள்” என்று அழைத்ததும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஈழ விடுதலை குறித்தும், காவிரி, முல்லை பெரியாறு நீர் பங்கீடு குறித்து மக்களின் பிரச்னைகளுக்காக அவர் போராடிய விதம் அற்புதமானது. மக்களுக்காக பணியாற்றி, மக்கள் பணியிலேயே அவர் உயிர் துறந்துள்ளார். அவர் கையால் விடுதலை பெற்று அவருக்கு நன்றி கூற வேண்டும் என்று பெருங்கனவு கண்டேன்.”
என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து பேரறிவாளன் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில்,
“என் தாயின் கரத்தை பற்றிக்கொண்டு கலங்காதீர்கள் உங்கள் மகன் தான் உங்களுடன் வந்து சேரப்போகின்றாரே என பரிவோடு என் தாயிடம் கூறியவர் முதல்வராக இருந்த ஜெயலலிதா.
அந்த வார்த்தை 23 ஆண்டுகளாக தன்னலம் கருதா தியாகத்திற்கு அங்கிகாரம் வழங்கியதாக இருந்து.
அதுமட்டுமல்லாது 2011ஆம் ஆண்டில் மூவர் உயிருக்காக சட்டப்பேரவை அவர் இயற்றிய தீர்மானம், 2014இல் 7பேரின் விடுதலைக்காக ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தை கையாண்ட விதமும், “திருவாளர்கள்” என்று அழைத்ததும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஈழ விடுதலை குறித்தும், காவிரி, முல்லை பெரியாறு நீர் பங்கீடு குறித்து மக்களின் பிரச்னைகளுக்காக அவர் போராடிய விதம் அற்புதமானது. மக்களுக்காக பணியாற்றி, மக்கள் பணியிலேயே அவர் உயிர் துறந்துள்ளார். அவர் கையால் விடுதலை பெற்று அவருக்கு நன்றி கூற வேண்டும் என்று பெருங்கனவு கண்டேன்.”
என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.





0 Responses to பேரறிவாளன் ஜெயலலிதா மறைவுக்கு கண்ணீர் மல்க கடிதம்!