பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் யோசனையொன்றை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம், ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கையளிக்கவுள்ளனர்.
இந்த யோசனையில், அக்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்களாக 70 பேர் கையொப்பமிட்டுள்ளனர். அவர்களில், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிப்போரும் அடங்குகின்றனர் என அறியமுடிகின்றது.
கூட்டு எதிரணியினால் (மஹிந்த அணி) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில், 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அந்தப் பிரேரணை மீதான விவாதம், எதிர்வரும் ஏப்ரல் 04ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இந்த யோசனையில், அக்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்களாக 70 பேர் கையொப்பமிட்டுள்ளனர். அவர்களில், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிப்போரும் அடங்குகின்றனர் என அறியமுடிகின்றது.
கூட்டு எதிரணியினால் (மஹிந்த அணி) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில், 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அந்தப் பிரேரணை மீதான விவாதம், எதிர்வரும் ஏப்ரல் 04ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
0 Responses to பிரதமருக்கு ஆதரவான பிரேரணையில் 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்து!