விடுதலைப் புலிகள் அரசாங்கத்தால் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், அதன் தலைவர்கள் தொடர்ந்தும் சர்வதேச ரீதியாக செயற்படுவதற்கு முயற்சிப்பதாக இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கடந்த 2006ம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்ட அமைப்பாக பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புலிகளின் கனடா பிராந்திய ஒழுங்கமைப்பாளராக வேலுப்பிள்ளை தங்கவேலு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்த கருத்துக் கணிப்பை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் விடுதலைப் புலிகள் அரசாங்கத்தால் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு விட்டமையை ஏற்றுக் கொள்வதாக வேலுப்பிள்ளை தங்கவேலு தெரிவித்துள்ளார்.
எனினும் தொடர்ந்து அரசியல் ரீதியாக போராடி தமிழர்களுக்கு விடுதலைப் பெறுவது தொடர்பில் பேசவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் இந்த தேர்தல் நடத்தப்படும் முறைகள் குறித்து கனடிய புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Responses to தமிழீழ விடுதலைப்புலிகள், கனடாவில் கருத்துக்கணிப்பை நடத்தவுள்ளனர்