Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொழும்பில் பிரத்தியேக இடமொன்றில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த தேசிய தலைவர் பிரபாகரனின் தந்தையார் இலங்கை நெரப்படி இன்று காலை மரணமானார். அவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இதன் காரணமாகவே இவர் இறந்ததாக இராணுவச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதே இடத்திலேயே தேசிய தலைவரின் தாயாரு தடுத்துவைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக நோய்வாய்பட்டிருந்த திரு.வேலுப்பிள்ளைக்கு தாம் எந்த வகையான மருத்துவ உதவிகளை வழங்கினோம் என்றோ, அல்லது எந்த நோயின் தாக்கம் காரணமாக இவர் இறந்தார் என்பது பற்றி இராணுவத்தரப்பு கூற மறுத்துள்ளது. மேற்பட்டி பூத உடலை என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்த சந்தேகங்களும் எழுகின்றன. பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கீள் தற்போது இருந்துவரும் தேசிய தலைவரின் தாயர் நிலையும் பெரும் சந்தேகத்திற்கிடமாகவே உள்ளது.

இவர்களுக்கு எந்த வகையான மருத்துவ உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன, அல்லது மருத்துவ உதவிகள் சரிவரக் கிடைக்கின்றனவா என்பதும் மிகுந்த சந்தேகமாகவே உள்ளது.

நன்றி: அதிர்வு

0 Responses to தேசிய தலைவரின் தந்தை வேலுப்பிள்ளை அவர்கள் காலமானார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com