Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் நிர்வாணமாக்கப்பட்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதைக் காண்பிப்பதாகக் கருதப்படும் "சனல் 4" ஒளிநாடா உண்மையானது என அறிக்கையை வெளியிட்ட பிலிப் அல்ஸ்ரன் சுதந்திரமாகச் செயற்படுகின்றவர் என .நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படும் வீடியோ குறித்து கவனம் செலுத்துவேன் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து நியூயார்க்கில் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,

பிலிப் அல்ஸ்ரனின் அறிக்கையை நான் பார்த்தேன். அவர் .நா. மனித உரிமைக் கவுன்ஸிலின் விஷேச அறிக்கையாளர்.

பிலிப் அல்ஸ்ரன் சுதந்திரமாகச் செயற்படுகின்றவர். அவரது தனிப்பட்ட அறிக்கையையும் இலங்கை அரசின் அறிக்கையையும் நீங்களும் அறிந்திருப்பீர்கள். நாங்கள் அனைத்து விஷயங்களையும் ஆராய்வோம். பின்னர் .நாவால் எதனைச் செய்ய முடியுமோ அதனைச் செய்வோம்.

இலங்கையைப் பொறுத்தவரை இன்னும் முடிவடையாத பல விஷயங்கள் உள்ளன.

இம்மாத இறுதிக்குள் இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீளக்குடியமர்த்தப்படுதல், அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், பதில் சொல்லும் கடப்பாடு போன்ற விஷயங்களே இன்னமும் முடிவடையாத நிலையில் காணப்படுகின்றன.

இலங்கைக்கான எனது விஜயத்தின் போது ஜனாதிபதி ராஜபக்சேவிடம் இது குறித்துக் கலந்துரையாடியுள்ளேன்.

இந்த விஷயங்கள் குறித்து தொடர்ந்தும் கவனம் செலுத்துவேன் என்றார் பான் கீ மூன்.

0 Responses to தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படும் வீடியோ பற்றி கவனம் செலுத்துவேன்: பான் கீ மூன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com