Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண பிரதி தலைவர் உட்பட பிள்ளையான் குழுவை சேர்ந்த பல உறுப்பினர்கள் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க விரும்புவதாகவும் அவ்வாறு பகிரங்கமாக தமது முடிவை அறிவித்தால் அரசுத்தரப்பிலிருந்து அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் தமது முடிவை அறிவிக்கும் தினத்தை ஒத்திவைத்துள்ளார்கள் என்றும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்ட இரகசிய பேச்சுக்களின் அடிப்படையில் பிள்ளையான் குழுவினருடன் பல இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியிலிருந்து பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தவர்களுக்கு அரச தரப்பிலிருந்து அச்சுறுத்தல் ஏற்படும் சாத்தியம் இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களது பெயர்கள் தேர்தல் நெருங்கும் சமயத்தில் மாத்திரமே வெளியிட தீர்மானித்திருப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இடம்பெற்ற பேச்சுக்கள் மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளன என்றும் பொன்சேகாவுக்கான அவர்களது ஆதரவை வெகுவிரைவில் அவர்கள் அறிவிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to பிள்ளையான் குழுவில் பலர் பொன்சேகாவுக்கு ஆதரவு: பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்கிறது ஐ.தே.க.

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com