Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவில் தளமிட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் அங்குள்ள தமிழ் மக்களின் சொத்துக்களை சூறையாடுவதிலும் அழிப்பதிலும் ஈடுபட்டுள்ளதாக அண்மையில் அப்பகுதிக்கு சென்றுவந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அப்பகுதி மக்களின் வீடுகளிலுள்ள பெறுமதியான மரங்கள், கதவுகள், யன்னல்கள் என்பவற்றை அப்புறப்படுத்தி மணலாற்றுப் பகுதி ஊடாக சிங்கள பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் -

சிறிலங்கா இராணுவத்தினரால் மாங்குளத்தில் திறக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கான உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையத்தில் மக்களிடம் சூறையாடப்பட்ட வாகனங்களின் உதிரிப்பாகங்களும் விற்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள், கார்கள், வான்கள், உந்துருளிகள் என்பன வீதியின் அருகாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்ததாகவும் -

ஒரு உந்துருளியை 500 ரூபாவுக்கு சிறிலங்கா இராணுவத்தினரின் வணிக நிலையத்தில் வாங்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

0 Responses to முல்லைத்தீவில் மக்கள் சொத்துக்களை சூறையாடி மணலாற்று பகுதியூடாக எடுத்து செல்லும் படையினர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com