Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னியில் மீளக் குடியேற்றப்பட்ட மக்கள் சிறீலங்கா படையினரால் துன்புறுத்தப்பட்டு வருவதாகவும், குறிப்பாக பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக தம்மிடம் முறையிடப்பட்டுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் சென்றிருந்த பிரித்தானிய பதில் தூதுவர் மார்க் கூடிங்கிடம் (Mark Gooding) முறையிட்டுள்ளது.

சுன்டிக்குழியிலுள்ள விடுதியொன்றில் நேற்று அவரைச் சந்தித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சிவஞானம் சிறீதரன் ஆகியோரே தமக்கு இவ்வாறான பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து பிரித்தானிய பதில் தூதுவர் மார்க் கூடிங் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே.கணேசைச் சந்தித்து அங்குள்ள நிலவரங்களைக் கேட்டறிந்துள்ளார்.

0 Responses to வன்னியில் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள்: த.தே.கூட்டமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com