Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு இன்று 10வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றார். இவரது பயணத்துடன் அதிகளவிலான மக்கள் தொடர்ச்சியாக இணைந்து வருகின்றனர்.

இன்று காலை முதல் 10ற்கும் மேற்பட்டவர்கள் சிவந்தனுடன் இணைந்து நடந்து செல்லுகின்றனர். நேற்று 30 பேர் வரையில் இணைந்து நடந்த அதேவேளை, சிவந்தன் 50 கிலோமீற்றர்களைக் கடந்திருந்தார். அவர் நேற்று அதிக தூரங்கள் கடந்திருந்தார்.

தற்தற்போது தற்போது செவ்றோனை வந்தடைந்துள்ளதுடன்,செவ்றனில் அமைக்கப்பட்டுள்ள சிறீலங்காவினால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் நினைவு கல் அமைந்துள்ள இடத்தில் அவர் அஞ்சலி அஞ்சலி செலுத்தியுள்ளார். அதே வேளை அந்நகர நகரபிதா கலந்து கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாளைக்காலை 8மணியிலிருந்து நடை பயணத்தை தொடரவுள்ள சிவந்தன் லாக்குர்ணாவ் என்ற இடத்தை நாளைக் காலை 10.30மணியளவில் வந்தடைவார் எனவும் அதன் பின்னர் ஒபவில்லியே ஊடாக லாச்சப்பல் மாநகர சபையை வந்தடைவார் எனவும் நகரசபை முன்றலில் ஒரு மணிநேர சிறிய ஒன்று கூடல் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரீஸ் நகர உறவுகளே சிவந்தனின் நடைப்பயணத்திற்கு உங்கள் ஆதரவை அள்ளிவழங்குங்கள்.
சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,

கொல்லப்பட்ட அப்பாவி மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும்,

தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,

மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்,

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சிவந்தன் பிரான்ஸ் செவ்றன் வந்தடைந்துள்ளார் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com