Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டின் கீழிருந்த முல்லைத்தீவு மண் தெற்கிற்குப் போகத் தொடங்கியிருக்கின்றது. நாள்தோறும் லட்சக் கணக்கில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்புக்குச் செல்லும் சிங்கள மக்கள், தலைவர் பிரபாகரன் வாழ்ந்த ஊர் எனத் தெரிவித்து அங்கிருந்து மண்ணை எடுத்துச் செல்கின்றனர் என அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

இதுவரை 28 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வடக்கிற்கு சுற்றுலாவாக வந்து சென்றிருப்பதாக அண்மையில் படையதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவிற்கு வருகின்ற மக்களின் முக்கிய நோக்கமாக புதுக்குடியிருப்பு மண்ணே பிரதானமாக இருக்கின்றது.அவர்கள் எதுவித வேறுபாடின்றியும் இந்த மண்ணை எடுத்துச் செல்வதில் ஆர்வம் காட்டியதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தலைவர் பிரபாகரனின் முகாம் எங்கிருந்தது, தலைவர் பிரபாகரன் எங்கு தங்கியிருந்தார் என அம்மக்கள் முல்லைத்தீவுப் பகுதி மக்களை கேட்டு எடுத்துச் செல்வதாகவும் அங்கு வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

வலம்புரி.

0 Responses to புதுக்குடியிருப்பு மண்ணை எடுத்துச் செல்லும் தெற்கு மக்கள் - தலைவர் வாழ்ந்த ஊர் மண்ணாம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com