ஈழ தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடந்தது.
பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான்,
ஒரு நடிகை என் மீது புகார் கொடுத்ததை வைத்து, என்னைக் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் சுவரொட்டிகள் ஒட்டுகின்றனர். தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளான முல்லைப் பெரியார், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், காவிரி நீர் பிரச்னை என எந்தப் பிரச்னைக்காவது காங்கிரஸ் கட்சியினர் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனரா? என்றார்.
என்னைக் கைது செய்ய வேண்டும் என காங்கிரசார் சுவரொட்டிகள் ஒட்டுகின்றனர்: சீமான்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
19 June 2011



0 Responses to என்னைக் கைது செய்ய வேண்டும் என காங்கிரசார் சுவரொட்டிகள் ஒட்டுகின்றனர்: சீமான்