மட்டு நகர் மேயர் சிவகீதா பிரபாகரன் ஈ.பி.டி.பி ஒட்டுக் குழுவின் தலைவர் டக்ளசின் மனைவி என்றும் இவர்களுக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும் விக்கி லீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பான கேபில் மூலம் இச் செய்தி அமெரிக்க தலைமையகத்துக்கு அறிவித்தவேளை அவற்றை ஊடறுத்த விக்கி லீக்ஸ் இத் தகவல்களை வெளியிட்டுள்ளது. தற்போது சிவகீதா பிரபாகரன் என்ற பெயரில் மட்டு நகர மேயராக உலாவரும் இவர் முன்னைய பெயர் பத்மினியாகும். இவருக்கும் டக்ளஸ் மாமாவுக்கும் பிறந்த இரண்டு குழந்தைகளையும் டக்ளஸே வளர்த்து வருகிறார். இவர்களை விட்டுப் பிரிந்து பின்னர் சிவகீதா மகேஷ் என்பவரை மணம் முடித்துள்ளார். இத் தகல்களை மகேஷ் அமெரிக்க தூதரகத்துக்குத் தெரிவித்துள்ளார்.
இதுமட்டும் அல்ல சிவகீதா பிரபாகரன் பத்மினி என்ற பெயரில் சுற்றியவேளை அவருக்கும் காட்டிக் கொடுத்த கருணாவுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்ததாகவும் விக்கி லீக்ஸ் மேலும் தெரிவித்துள்ளது. சிவகீதா அவர்கள் கருணாவுடன் காதல் லீலையில் ஈடுபட்ட விடையத்தை விக்கி லீக்ஸ் மட்டும் அல்ல மட்டு நகரில் உள்ள சில முக்கிய அரசியல் புள்ளிகளும் உறுதிசெய்கின்றனர். ஒரு சமயம் கருணா சிவகீதாவையும் அவரின் தற்போதைய கணவரையும் சுடப்போவதாக மிரட்டியதாகவும் அதனால் அவர்கள் சென்னை சென்று அங்கே தங்க எண்ணியிருந்தாகவும் மேலும் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் அவர்கள் சிவகீதா தான் தன் மனைவி என்பதை ஒருபோதும் வெளியிட்டது இல்லை. தனது அலுவலகத்தில் வேலைபார்க அதிகம் பெண்களைத் தான் அவர் அமர்த்துவது வழக்கம். இவரின் பழக்கவழக்கம் காரணமாகவே சிவகீதா இவரை விட்டு விலகினாரா இல்லை சிவகீதாவைப் பிடிக்காமல் டக்ளஸ் விலகினாரா என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு அமைச்சராக அரசியல்வாதியாக இருக்கும் டக்ளஸ் மற்றும் சிவகீதா ஆகியோர் கடந்தகால வாழ்க்கையை உற்றுப்பார்த்தால் மிக மிகக் கேவலமாக உள்ளது. இவரைத் தான் தமிழர்களின் தலைவர் என்று இலங்கை அரசு கொண்டுவர முயற்சிகளை மேற்கொள்கிறதா? மண்ணெண்ணை முதல் பொண்ணெண்ணை வரை எதையும் டக்ளஸ் விட்டுவைக்கவே இல்லை.
இதேவேளை சயிக்கிள் காப் கிடைத்தால் கருணா சிவகீதாவையும் விட்டுவைக்கவுமில்லை. இவர்கள் தான் தற்போதைய தமிழ் தலைவர்களாம்!
விக்கி லீக்ஸிடம் இருந்து அதிர்வு பெற்ற தகவல்: குறிஎண்: 07COLOMBO733

அதிர்வு



காட்டிகொடுத்தவனக்கு ஒருத்தன் கூட்டி கொடுத்துள்ளான் ஆஹா ....... இவன் எல்லாம் தமிழனா, கருணா ஒரு இனத்துரோகி ......
டக்லஸ் குடைபிடிக்க, கருணா சாமரம்வீச, மகேஷ் மலர்தூவ, பாடும் மீன் வரைந்த கொடிபறக்கும்
மஞ்சத்திலே இருக்கும் சிவகீதாவோடு........ ராஜபக்ச , கோத்தபாயா , பசில் சகோதரர்கள்
இனப்பிரச்சனைத் தீர்வுக்கான உல்லாச, சல்லாபப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கும் காட்சிதனைக்
காண வாருங்கள் தன்மானத் தமிழினமே.