சேனல் - 4 தொலைக்காட்சி இலங்கை அரசின் போர்க்குற்ற ஆதாரங்களை வெளியிட்டது.
தேசியத் தலைவரின் இளையமகன் பாலசந்திரனை சிங்கள ராணுவம் சுட்டுக்கொன்றதுக்கான ஆதாரங்களை விரிவாக அம்பலப்படுத்தியது.
மேலும், இலங்கயின் தமிழர்கள் பகுதியில் மருத்துவமனைகள் மீது குண்டுகள் வீசியது, பாதிக்கப் பட்ட மக்களுக்கு மருத்து, மாத்திரைகள் மற்றும் உணவு வழங்க கூடாது என்று மருத்துவர்களை எச்சரித்தது,
அதிபயங்கரமான ஆயுதங்களை உபயோகப் படுத்தி மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது என்பன உட்பட அடுக்கடுக்காக பல்வேறு போர்க்குற்றங்களை ஆதாரங்களுடன் அம்பலபடுத்தியது.
இந்த போர்க்குற்ற ஆதாரங்களை அடுத்து, சர்வதேச சமூகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று கேள்வி எழுப்புகிறது சேனல் - 4 தொலைக்காட்சி.
இலங்கையின் கொலைக்களங்கள் - பாகம் 2 - காணொளி



0 Responses to சேனல் -4 வெளியிட்ட போர்க்குற்ற ஆதாரங்கள்!