Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத் தமிழர்கள் விடயத்தில் தமிழகத்தின் இன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேசியத்தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், சிறிலங்காப் படையினரால் கொடுரமான முறையில் கொல்லப்பட்ட காட்சியை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது. அதனைப் பார்த்து தாம் இரத்தக் கண்ணீர் வடிப்பதாக தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி தெரிவித்திருந்தார்.

ஆனால் கருணாநிதி வடிக்கும் கண்ணீர் உண்மையில் நீலிக் கண்ணீரே தவிர உண்மையில்லை எனவும் அதேபோன்று முதல்வர் ஜெயலலிதாவும் இவ் விடயத்தில் நீலிக்கண்ணீர் வடிப்பதாகவும் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தெரிவிக்கையில்,
போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனையும், மற்றவர்களையும் சிங்கள இன வெறியர்கள் கொடூரமாகக் கொலை செய்ததை சனல் 4 ஒளிபரப்பியது. இந்தக் காட்சியைப் பார்த்த ஒட்டு மொத்த உலகத் தமிழர்களும் கண்ணீர் வடிக்கின்றனர்.
அது உண்மையான கண்ணீர். தமிழினத் தலைவர் என்று கூறிக் கொள்ளும் கருணாநிதியும், தமிழக முதல்வரும் மாறாக நீலிக்கண்ணீரே வடிக்கின்றனர்.

இறுதிக்கட்ட போரின்போது, உலகில் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளை, கொத்து, கொத்தாகப் போட்டு, ஈழத் தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். உலகத் தமிழர்கள், இதைத் தடுத்து நிறுத்தும்படி கூக்குரலிட்டனர்.
ஆனால், கருணாநிதியோ காலை உணவை முடித்துக் கொண்டு, உண்ணாவிரதம் இருந்தார். மூன்று மணி நேர உண்ணாவிரதத்திற்குப் பின், மதிய உணவு நேரத்தின்போது, போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது எனக் கூறி தமது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

அதனையடுத்து, தொடர்ந்தும் குண்டு வீசப்படுகிறதே என செய்தியாளர்கள் கேட்டபோது, “மழை விட்டும் தூவானம் விட வில்லை” எனக்’ கூறியவர் தான் கருணாநிதி.

ஜெயலலிதாவோ இரு தரப்பினரிடையே போர் நடக்கும்போது, அப்பாவி மக்கள் சிலர் கொல்லப்படுவது இயல்பு என கூறினார். இவர்கள் இருவரும், தாம் ஈழத் தமிழர்களைக் காக்க புதிய அவதாரம் எடுத்தவர்கள் போல் நாடகமாடுகின்றனர்.

இப்போது, அமெரிக்கா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா செயற்பட வேண்டும். சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதாக மத்திய அரசு உறுதி அளிப்பதை தவிர, வேறு எந்த அறிவிப்பாலும் எங்களை சமாதானப்படுத்த முடியாது என்று நாடாளுமன்ற தி.மு.க., குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். இதுவும் நாடகமாக இருந்து விடக் கூடாது. என்றார்.

0 Responses to பாம்பின் கால் பாம்பறியும் - அறிந்து கொண்ட டாக்டர் ராமதாஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com