Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனடாவில் டொரொண்ட்டோவைச் சேர்ந்த கியுமா என்ற 78 வயது முதியவர் அங்குள்ள சிறுவர் சிறுமியரோடு 31 முறை பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதற்காக அவரை செக்ஸ் சுற்றுலா குற்றத்தின் கீழ் யூலையில் கைது செய்துள்ளனர்.

தற்பொழுது சிறுவர்கள் பாலியல் கண்ணோட்டத்துடன் தொடுதல் போன்ற புதிய சில குற்றம் சாட்டுகளும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளதால் இவரை வரும் திங்களன்று பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

இந்தக் குற்றங்கள் அனைத்தும் இவர் கியுபா நாட்டுக்கு கடந்த 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் வந்திருந்தபொழுது நடைபெற்றவை ஆகும்.

இது குறித்து காவல்துறை அதிகாரி கிம் கிராஸ் கூறுகையில், இந்த முதியவர் சிறுவர், சிறுமியருடன் இருக்கும் ஆபாசப் படங்கள் கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 1997ம் ஆண்டு கனடாவின் குற்றவியல் சட்டம் குழந்தைப் பாலியல் சுற்றுலாவுக்குத் தடை விதித்தது.

கனடா குடிமக்களும், இங்கு நிரந்தரக் குடியுரிமை பெற்ற அந்நியர்களும், வெளிநாடுகளில் தங்கியிருக்கும் பொழுது குழந்தைகளுடன் பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டால் கனடாவில் குற்றவியல் சட்டப்படி தண்டிக்கப்படுவர். எனவே தான் இந்த 78 வயது முதியவரும் தற்பொழுது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

0 Responses to 78 வயது முதியவர் சிறுவர் சிறுமியரோடு பாலியல் முறைகேடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com