Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வீர மரணம் அடைந்த தமிழக வீரர் முகுல் வரதராஜன்  உடல் முழு ராணுவ மரியாதையுடன் பெசன்ட்  நகர் மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இரண்டு தினங்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நடைப்பெற்ற துப்பாக்கி சூட்டில் வீரமரணம் அடைந்தார் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ  அதிகாரி  முகுல் வரதராஜன். இவர் பெங்களூரில் உள்ள ராணுவக் குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்தார், இவரது பெற்றோர் தாம்பரத்தில் வசித்து வருகின்றனர்.

வீரமரணம் அடைந்த முகுலின் உடல் நேற்று நள்ளிரவு தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.  சென்னையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் உடற்கூறு சோதனை முடிவடைந்த நிலையில், முகுலின் உடல் தாம்பரத்தில் உள்ள பெற்றோரின் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

0 Responses to வீர மரணம் அடைந்த தமிழக வீரரின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com