Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ள உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் பெரும்பான்மையாக இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் மனித உரிமைகள் கண்காணிப்பம் கோரியுள்ளது.

தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 29வது அமர்வில் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே மனித உரிமைக் கண்காணிப்பகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் புதிய அரசாங்கம் நம்பகத்தன்மை, வெளிப்படையான நீதி மற்றும் பொறுப்புக்கூறுதல் ஆகியவற்றை உருவாக்கும்போது அதற்கான பொறிமுறை சர்வதேச பொறிமுறையாகவோ அல்லது அந்தப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் பெரும்பான்மையாக இடம்பெறுவதையோ உறுதிசெய்யவேண்டும்.

அத்தோடு, இலங்கை அரசாங்கம் தனது உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்கும்போது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேர்மையான பேச்சுகள் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். இன்னமும் தீர்க்கப்படாமலிருக்கின்ற முக்கிய விடயங்களுக்குத் தீர்வைக் காண நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்துடன் ஒத்துழைப்பேன் என்ற தனது வாக்குறுதியை இலங்கை நிறைவேற்றவேண்டும். ஆணையாளர் அலுவலகத்தினர் தங்களுக்குத் தேவையான மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்கவேண்டும்.” என்றுள்ளது.

0 Responses to இலங்கையின் உள்ளக பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் அவசியம்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com