எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு வழங்கப்படாது. அத்தோடு, தேசியப் பட்டியலிலும் இடம் வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் பிரதமர் வேட்பாளர்கள் என்று யாரும் முன்னிறுத்தப்பட மாட்டார்கள் என்றும், தேர்தல் பிரசாரங்களை நடத்துவதற்கும் இடமில்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்ததாக ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட பொதுக்கூட்டத்திலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் பிரதமர் வேட்பாளர்கள் என்று யாரும் முன்னிறுத்தப்பட மாட்டார்கள் என்றும், தேர்தல் பிரசாரங்களை நடத்துவதற்கும் இடமில்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்ததாக ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட பொதுக்கூட்டத்திலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.




0 Responses to மஹிந்தவுக்கு வேட்பு மனுவும் இல்லை, தேசியப் பட்டியலிலும் இடமில்லை: ஜனாதிபதி