Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க சந்தர்ப்பமளிக்கப்படவில்லை என்று மல்வத்தை மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

மல்வத்தை மகாநாயக்க தேரரை மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று வியாழக்கிழமை சந்தித்து ஆசி பெற்றார். இதன்போது, “கடந்த ஆறு மாதங்களாக இந்த நாட்டில் எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை” என்று குற்றஞ்சாட்டினார். அதற்கு பதிலளித்த மகாநாயக்க தேரர், “வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இடமளிக்கவில்லை என்பதே உண்மை” என்றுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தல விமான நிலையங்களை தவிர்த்து, வேறு அபிவிருத்திப் பணிகளில் கவனம் செலுத்தியிருந்திருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட மல்வத்தை மகாநாயக்க தேரர், “ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தினால் கிராமங்களுக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை. அதனாலேயே பொதுமக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். ‘கை’ சின்னத்தைத் தவிர்த்து ஏனைய கட்சிகளுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி வைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தின்போதும், அக்கட்சியின் கொள்கைகள் மாற்றப்படுகின்றன. இதனால், சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்பினால் பொதுமக்களுக்கு தேவையான சேவை வழங்க முடியாமல் உள்ளது.

எல்லா சந்தர்ப்பங்களிலும், சுதந்திரக் கட்சி தனது கை சின்னத்தில் மாத்திரம் போட்டியிட்டிருக்கலாம். அதிகாரம் கிடைத்தவுடன் கிராமத்தை மறந்துவிடும் பலர், மீண்டும் தேர்தல் நெருங்கும்போதே கிராமத்தை நாடி மீண்டும் வருகிறார்கள். கிராமத்துக்கும் மக்களுக்கும் சேவையாற்ற அதிகாரம் தேவையில்லை. சஜித் பிரேமதாச, கடந்த காலங்களில் அவ்வாறே சேவையாற்றினார்” என்றுள்ளார்.

0 Responses to மைத்திரி அரசு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வாய்ப்பளிக்கப்படவில்லை: மல்வத்தை மகாநாயக்கர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com