பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்தால் மாத்திரமே வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் ஆதரவளிக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவும், ஈபிஆர்எல்எப்.வும் அறிவித்துள்ளன.
2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் மீதான இரண்டாம் வாசிப்பு முடிவடைந்துள்ளது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு அளித்துள்ள நிலையில் இறுதி வாசிப்பில், வரவு - செலவுத் திட்டத்துக்கு வாக்களிப்பில் கலந்து கொள்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் அனைவரையும் விடுவித்தால் மட்டுமே வரவு - செலவுத் திட்டத்தை ஆதரிப்பது என்றும் இல்லையெனில் கட்சியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பில் பங்கேற்பதில்லை என்றும் அக்கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியினரும் வரவு - செலவுத் திட்டத்தை ஆதரிப்பதில்லை என முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் மீதான இரண்டாம் வாசிப்பு முடிவடைந்துள்ளது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு அளித்துள்ள நிலையில் இறுதி வாசிப்பில், வரவு - செலவுத் திட்டத்துக்கு வாக்களிப்பில் கலந்து கொள்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் அனைவரையும் விடுவித்தால் மட்டுமே வரவு - செலவுத் திட்டத்தை ஆதரிப்பது என்றும் இல்லையெனில் கட்சியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பில் பங்கேற்பதில்லை என்றும் அக்கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியினரும் வரவு - செலவுத் திட்டத்தை ஆதரிப்பதில்லை என முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Responses to அரசியல் கைதிகளை விடுவிக்காவிட்டால் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவில்லை; ரெலோ, ஈபிஆர்எல்எப் அறிவிப்பு!