Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்தால் மாத்திரமே வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் ஆதரவளிக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவும், ஈபிஆர்எல்எப்.வும் அறிவித்துள்ளன.

2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் மீதான இரண்டாம் வாசிப்பு முடிவடைந்துள்ளது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு அளித்துள்ள நிலையில் இறுதி வாசிப்பில், வரவு - செலவுத் திட்டத்துக்கு வாக்களிப்பில் கலந்து கொள்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் அனைவரையும் விடுவித்தால் மட்டுமே வரவு - செலவுத் திட்டத்தை ஆதரிப்பது என்றும் இல்லையெனில் கட்சியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பில் பங்கேற்பதில்லை என்றும் அக்கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியினரும் வரவு - செலவுத் திட்டத்தை ஆதரிப்பதில்லை என முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to அரசியல் கைதிகளை விடுவிக்காவிட்டால் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவில்லை; ரெலோ, ஈபிஆர்எல்எப் அறிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com