இறுதி மோதல்களின் போது உயிரிழந்த பொதுமக்களை முள்ளிவாய்க்காலில் நினைவுகூர முடியும். அதற்கு அரசாங்கம் எந்தவித தடையையும் விதிக்காது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஆயினும், விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நிகழ்வுகளை யாரும் நடத்த முடியாது. அதையும் மீறி நினைவுகூர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கின் பாதுகாப்பு நிலைமைகளை ஆராய பொலிஸ், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே ருவான் விஜயவர்த்தன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஆயினும், விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நிகழ்வுகளை யாரும் நடத்த முடியாது. அதையும் மீறி நினைவுகூர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கின் பாதுகாப்பு நிலைமைகளை ஆராய பொலிஸ், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே ருவான் விஜயவர்த்தன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
0 Responses to இறுதி மோதல்களில் உயிரிழந்தவர்களை முள்ளிவாய்க்காலில் நினைவுகூர முடியும்: ருவான் விஜயவர்த்தன