Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளின் போது, சுவரொட்டிகளை ஒட்டுதல் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக வீடு வீடாக செல்லும்போது, ஒரு தடவையில் 10 பேர் மாத்திரம் செல்லுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில், அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் இடையில் நேற்று புதன்கிழமை காலை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போதே, மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பிரச்சார நடவடிக்கைகளில் சுவரொட்டிகள், பொலித்தீனுக்கு தடை: மஹிந்த தேசப்பிரிய

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com